Tamilnadu graduate teacher Association General Meeting tomorrow evening in Perambalur going on in the perambalur district.
பெரம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாளை மாலை 5 மணி அளவில் மாவட்டத் தலைவர் கோ.இராமமூர்த்தில தலைமையில் நடைபெற உள்ளது.
பெ. ராஜ்குமார் (செயலாளர் ) , வெ.துரை (பொருளார்) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மாவட்ட கெளரவத் தலைவர் ஏ.வி.இ.பாபுவாணன், மு.மாநில பொதுச்செயலாளர் கி.மகேந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.
கூட்டத்தில், தகுதிகாண் பருவம் ஆணை வழங்க ஏற்படும் காலதாமதம், கலந்தாய்வு மாறுதல், உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வில் உள்ள பிரச்சினைகள்
உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வுக்கான வழக்கு நிதி திரட்டுதல், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாகவும், 2016-2017 ஆண்டு உறுப்பினர் சேர்க்கை செய்வது குறித்தும், மாவட்ட பிரச்சினைகள் மற்றும் பிற செயல்படுகளை குறித்து கூட்டம் நடை பெற உள்ளதால் மாவட்ட மற்றும் வட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.