The camp will take place at the district Aug.31 villages in the project description on the AMMA
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:
நாளை மறுநாள், (ஆக.31) பெரம்பலூர் வட்டத்தில் பெரம்பலூர் (வடக்கு), வேப்பந்தட்டை வட்டத்தில் மலையாளப்பட்டி, குன்னம் வட்டத்தில் சு.ஆடுதுறை மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் எலந்தலப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.