The demonstrated on behalf of the Perunthalaivar makkal katchi demanding removal of liquor shop in the village of arasadivandal

ராமநாதபுரம் மாவட்டம் அரசரடிவண்டல் கிராமத்தில் உள்ள அரசு மதுபானகடையை அகற்றக்கோரி பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் போகலுார் ஒன்றியம் அரசரடிவண்டல் கிராமத்தில் பொது மக்களுக்கு இடையுறாக பள்ளி அருகே டாஸ்மாக் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த கடையை அகற்றக்கோரி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அகற்றப்படவில்லை. இந்நிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அரசரடி வண்டல் பள்ளி அருகே கிராம பெண்களும், பொது மக்களும் திரண்டு மதுபான கடையை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜ், மாநில உயர்மட்ட உறுப்பினர் ரவிசந்திரன் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஜெநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மதுபான கடையை அகற்றக்கோரி கண்டனஉரையாற்றினார். இந்த போராட்டத்தை தொடர்ந்து மதுபான கடை அகற்றப்பட வேண்டும். இல்லையேல் மக்களை திரட்டில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என மாநில தலைவர் கண்டனஉரையில் பேசினார்.

மாவட்ட தலைவர் ரவிசேதுபதி, மாவட்ட ெபாருளாளர் மாரிமுத்து, ராமநாதபுரம் நகர் தலைவர் மாரியப்பன், மாநில அமைப்பு செயலாளர் செல்லப்பன், தென்மண்டல தலைவர் அரசன், மாநில பொருளாளர் தர்மராஜ், உயர்மட்ட குழு உறுப்பினர் ஜோசப் ஆரோக்கிய ராசய்யா, மதுரை மாவட்ட செயலாளர் கார்த்திக் போகலுார் முனியசாமி உட்பட பலர் பேசினர். கிராம பெண்கள் மதுவிற்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

பரமக்குடி டிஎஸ்பி கருப்பையா, நயினார்கோயில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா ஆகிேயார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!