The general meeting of the heroic day of Ramanathapuram on the behalf of the AIADMK
ராமநாதபுரம் அ.தி.மு.க. மாணவரனி சார்பில் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது.
ராமநாதபுரம் அரண்மனையில் அ.தி.மு.க. மாணவரணி சார்பில் நடந்த வீரவணக்கபொதுக்கூட்டத்திற்கு மாணவரணி மாவட்ட தலைவர் வக்கீல் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முனியசாமி, மாவட்ட அவைத்தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை கழக பேச்சாளர் துாத்துக்குடி கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். முன்னாள் நகராட்சி தலைவர் ராமமுர்த்தி, பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் தர்வேஸ், முன்னாள் தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், மாவட்ட மத்திய வங்கி தலைவர் ஜெயஜோதி, முன்னாள் கவுன்சிலர்கள் ஆரிப்ராஜா, வீரபாண்டியன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணை செயலாளர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், முனியாண்டி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ராம்கோ துணைத்தலைவர் சுரேஷ் உட்பட பலர் பேசினர்.
மாணவரணி நகர் செயலாளர் காளிதாஸ் நன்றி தெரிவித்தார்.