The Noble Employee Award Ceremony on behalf of TMMK was held near Ramanathapuram!
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் தமுமுக மமக சார்பில் பொது தொண்டுக்கான உன்னத ஊழியர் விருது மற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கும் விழா கே.எஸ்.கே. ஜன்னத் மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு தமுமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தலைமை வகித்தார். இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாவட்ட செயலாளர் அன்சாரி திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்த்தினார். தமுமுக மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் வரவேற்றார்.
த மு மு க மாவட்ட நிர்வாகிகள் பரக்கத்துல்லாஹ், ஜாகிர்உசேன், நிசார், அஹமது, முகம்மது அலி, ஜாவித் அசாம், சாகுல் ஹமீது, அபுதாஹிர், மத்திய மாவட்ட நிர்வாகிகள் யாசர்அரபாத், சுலைமான், தமீம், தொண்டி ஐக்கிய ஜமாத்தலைவர் ஹிப்பத்துல்லா ஹாலித், முன்னாள் ஜமாத் தலைவர் செய்யதுஅலி, பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அஸ்கர், கிழக்குத் தெரு ஜமாத் தலைவர் பந்தேநவாஸ், தெற்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள் அலிகான் ஓடாவி, தெரு ஜமாத் தலைவர் அப்துல் ரஹ்மான்,சுலைமான், இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜசேகர், துணைத் தலைவர் ராஜா, வன்னியர் சங்க துணைத் தலைவர் ஆனந்த், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, தமுமுக ஒன்றிய தலைவர் பீர்முகம்மதுல மமக ஒன்றிய செயலாளர் தொண்டிராஜ், திமுக பேரூர் செயலாளர் இஸ்மத் நானா, காங்கிரஸ் நகர தலைவர் காத்தாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுத்தொண்டுக்கான உன்னத ஊழியர்கள் விருது தொண்டி மேற்கு பள்ளி தலைமையாசிரியர் புரஸ்கார் விருதுபெற்ற ஆசிரியர் சாந்தி முருகானந்தம், தினமும் காலை மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திருமலை, அன்பாலயா மனநலம் குன்றியோர் உண்டு உறைவிடப்பள்ளி நிர்வாகி சவேரியார், தொண்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் சித்தன், தொண்டி அரசு மருத்துவமனை டாக்டர் மற்றும் செவிலியர்கள் மற்றும் சிறந்த பொது சேவை செய்யும் தொண்டி ரோட்டரி கிளப் நிர்வாகி ஷேக் மஸ்தான், சிவா 24 மணி நேரமும் மருத்துவ பணி செய்யும் மருத்துவர்கள் மற்றும் தொடந்து மக்கள் பணிகள் கொரானா காலத்திலும் இரத்த தானத்திலும் திறம்பட பணிகள் செய்து வரும் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
இராமநாதபுரம் மத்திய மாவட்டம், தொண்டி பேரூர் ஆர்.எஸ்.மங்களம் பேரூர், பனைக்குளம், ஆனந்தூர், மங்களக்குடி, எஸ்.பி.பட்டனம் . தேவிபட்டனம், புதுவலசை, ராதானூர்,அத்தியூத்து, நம்புதாளை ஆகிய கிளைகளின் நிர்வாகிகளுக்கு உன்னத ஊழியர் விருதுகள் வழங்கப்பட்டது. பத்திரிகை நிருபர்கள் கண்ணன், சிவசங்கரன், ஆனந்தன், ஜெயந்தன் பகுருல்லா, கோட்டைசாமி, கரிகாலன், ரவி, மணிமாறன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். தூய்மை பணியாளர்களுக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது .
தமுமுக மாநில பொதுச்செயலர் பேராசிரியர் ஹாஜாகனி விருதுகள் மற்றும் நினைவு பரிசு வழங்கி சமுக நல்லினக்கத்திற்கும் மக்கள் பணிகளுக்கும் எடுத்துகாட்டாக விளங்கும் தமுமுக பணிகள் குறித்தும் தொண்டியின் வரலாற்று பின்னணி மக்களின் தூயபணிகள் குறித்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் பேசினார்.
தமுமுக மாநில செயலர் தொண்டி சாதிக்பாட்சா, மாநில செயலாளர் காரைக்கால் ரஹிம், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் கலில், சென்னை ஹனிபா, தேனி மாவட்டதலைவர் ஆலிம் பத்ரி, புதுகை கிழக்கு வழக்கறிஞர் சேக், திருவாடனை ஒன்றிய பெருந்தலைவர் முகம்மது முக்தார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொண்டி தமுமுக பேரூர் தலைவர் காதர் நன்றி கூறினார். .இதர்க்கான ஏற்பாடுகளை தமுமுக செயலாளர் நவர் பரக்கத் அலி, மைதீன் கம்மாது .பாதுசாகனி, நிசார், பெரியசாமி, அப்துல்ரஜாக், ஜாஸ், அஹமது இப்ராஹிம் ஆகியோர் செய்திருந்தனர்.