The Perambalur collector gave the subsidy to 25 fishermen fishing nets
2015-16ஆம் ஆண்டிற்கு உள்நாட்டு மீனவா;களுக்கு மீன்பிடி வலைகள் வாங்கியதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. 20கிலோ எடையுள்ள ஒரு யூனிட் செவுல் வலை அல்லது இழு வலை வாங்குவதற்கான கொள்முதல் விலை ரூ.15000-ல்; 50 சதவீதம் அதாவது ரூ.7500ஃ-(ரூபாய் ஏழாயிரத்து ஐந்நூறு மட்டும்) மானியமாக வழங்கிடவும்,
இதே போன்று ரூ.5000- மதிப்புள்ள வீச்சு வலை வாங்குவதற்கான கொள்முதல் விலையில் ரூ.2500-(ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மட்டும்) மானியமாக வழங்கிடவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கு 29 பயனாளிகளில் முதற்கட்டமாக 25 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.7500- வீதமும், 05 பயனாளிகளுக்கு தலா ரூ.2500- வீதமும் ஆக மொத்தம் ரூ.1,62,500- (ரூபாய் ஒரு இலட்சத்து அறுபத்தி இரண்டாயிரத்து ஐந்நூறு) மானியத் தொகையினை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதிதாசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.