The public presentation of the food prescriptions Day Camp || உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் சார்பில் விடுத்துள்ள அறிவிப்பு :

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும்,

சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் பெரம்பலூர் வட்டம், திருப்பெயர் கிராமத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் ரா.புஷ்பவதி தலைமையிலும்,

வேப்பந்தட்டை வட்டம், வெள்ளுவாடி கிராமத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) மு.துரை தலைமையிலும்,

குன்னம் வட்டம், எழுமூர் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் (மற்றும்) பழங்குடியினர் நல அலுவலர் எல்.இருதயமேரி தலைமையிலும்,

ஆலத்தூர் வட்டம், மங்கலம் கிராமத்தில், பொது விநியோகத் திட்டம் துணைப் பதிவாளர் ஆர். கிருஷ்ணசாமி தலைமையிலும் 13.05.2017 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெறவுள்ளது.

மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!