The Youth who escaped from the Perambalur hospital was recovered as a dead body in the lake!
பெரம்பலூர் நகரில் உள்ள கீழேரி என்றழைக்கப்படும் வெள்ளந்தாங்கி ஏரியில் இன்று காலை 30 வயது மதிக்க தக்க வாலிபரின் சடலம் ஒன்று மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பெரம்பபலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் தலையிலான போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படை உதவியுடன் ஏரியில் கிடந்த சடலத்தை மீட்ட, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உடற்கூறு ஆய்விற்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விளம்பரம்: