பெரம்பலூர் அருகே நிறுத்தப்பட்ட லாரியில் இருந்து டயர்கள் திருட்டு

schedule
2017-06-18 | 08:10h
update
2026-04-29 | 22:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Theft of tires from parked lorry near in Perambalur

பெரம்பலூர் அருகே நின்றுகொண்டிருந்த லாரியில் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு டயர்கள் உள்பட சக்கரங்களையும் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.இவர் தனக்கு சொந்தமான லாரியை நேற்றிரவு வேப்பந்தட்டையில் உள்ள
பெட்ரோல் பங்க் அருகில் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைத்துள்ளார்.

அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த லாரியின் பின் பக்கத்தில் உள்ள சுமார் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு டயர் மற்றும் சக்கரங்களையும் மர்மநபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். இது குறித்து ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து லாரி டயர்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 22:55:54
Privacy-Data & cookie usage: