Thirumandurai, Sengurichi Tollgate Strike for 4th day: A loss of about 1 crore to private company

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்க சாவடி, மற்றும் விழுப்புரம் மாவட்டம், செங்குறிச்சி சுங்க சாவடி ஊழியர்கள் பணியை புறக்கணித்து இன்று 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க ஆட்கள் இல்லாததால் இலவசமாக பயணித்து வருகின்றன.

இந்த டோல்கேட்டில் சுங்கவரி வசூல் செய்யும் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு வழங்க வேண்டியும், பணி பாதுகாப்பு வழங்க கோரியும் கடந்த ஒருவார காலமாக கறுப்பு பேட்ச் அணிந்து போராடி வந்தனர்.

இந்த நிலையில் கோரிக்கையை ஏற்காத நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு ஜெனரல் ஒர்க்ர்ஸ் யூனியன் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுங்கவரி வசூல் செய்யும் பணியை புறக்கணித்து போராட்டத்தை தொடங்கினர்.

திருமாந்துறை, செங்குறிச்சி ஆகிய இரு டோல்கேட் பகுதிகளிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுங்கம் வசூல் செய்யும் நிறுவனத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!