To the woman who tried to get on the bus, the robbers, who had snatched the chain, disappeared like lightning on the bike; Police investigation!

கற்பனை காட்சி

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் இன்று அதே கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மனைவி ஜோதி (40). இவர், தற்போது சென்னையில் டீக்கடை வைத்து அங்கேயே குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். தனது உறவுக்காரரான செல்வகுமார் என்பவரின் திருமணத்திற்காக ஊருக்கு வந்தவர் மாலை சுமார் 6.45 மணிக்கு கொளக்காநத்தம் – அணைப்பாடி சாலையில் உள்ள சமுதாய கூடம் அருகே பெண் அழைப்புக்காக கொளப்பாடி செல்ல ஏற்பாடு செய்து நின்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் படிக்கட்டில் ஏற முயற்சித்த போது, பின்னால் கருப்பு நிற பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த 3 அடையாளம் தெரியாத நபர்களில் வந்து பின்னால் உட்கார்ந்து இருந்தவன், ஜோதியின் கழுத்தில் இருந்த சுமார் ஐந்தே-கால் பவுன் மதிப்புள்ள இரண்டு செயின்களை பறித்து கொண்டு அணைப்பாடி நோக்கி தப்பி சென்று மின்னலாய் மறைந்தனர். இது குறித்த புகாரின் பேரில், மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!