சென்னை

திருச்சி இடையே சுங்க கட்டணம் ரத்து! தீபாவளி வாகன நெரிசலை தவிர்க்க NHAI அறிவிப்பு!

schedule
2024-10-26 | 16:35h
update
2024-10-27 | 02:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Toll fee canceled between Chennai – Trichy! NHAI notification to avoid Diwali traffic jam!

Model

தீபாவளி வாகன நெரி சலை தவிர்க்க சென்னை- திருச்சி இடையே சுங்கக் கட்டணம் வசூல் ரத்து செய் யப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை முகமையின் பிராந்திய அலுவலர் வீரேந் திர சம்பியால் தெரிவித்துள் ளார்.

நாடு முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் டோல்கேட்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் சுங்கக் கட்ட ணம் செலுத்த வேண்டும்.

இந்தசுங்கக்கட்டணம் ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஏப்ரல் மாதம் மற்றும் செப்டம்பர் மாதத்தில் மாற்றியமைக்கப்படுகிறது

Advertisement

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட் – கரி போக்குவரத்து மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு ப எடுத்து வருவதாக கூறியுள்ளார். ஆனால் நடை 5 முறையில் பல்வேறு சிக்கல் கள்உள்ளன. நெடுஞ்சாலை பராமரிப்பு செம்மையான முறையில் இல்லை.சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்ப சுடும் கட்டணம் வாகன உரி மையாளர்களின் எதிர்பார்ப் புக்கு அதிகமாக உள்ளது என்றெல்லாம் புகார்கள். எழுந்துள்ளன. எழு

திருவிழாக் காலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. குறிப் பாக தாம்பரத்துக்கும் பரனூ ருக்கும் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் காரணமாக பல மணி நேரம் வாகனங்கள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

இம்மாதம் 14-ஆம் தேதி நவராத்திரி மற்றும் விஜயத சமிக்கு பிறகு விடுமுறை = முடிவடைந்தநிலையில்பல் லாயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில்படையெடுத் தார்கள். இதனால் ஆத்தூர் மற்றும் பரனூர் சுங்கச்சாவடிகளில் கட்ட ணத்தை வசூலிக்கமுடியாத அளவுக்கு நிலைமை மோச மடைந்தது.

இதனால் சுங்கக் கட்டணத்தை வசூலிக்காமலேயே வாகனங்களை அனுமதித்தனர்.

தீபாவளி பண்டிகை வரு கிற 31-ஆம் தேதி வெகுசி றப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. விமானங்கள், ரெயில்கள், பேருந்துகள், வாடகை வாகனங்கள் என அனைத்திலும் முன்பதிவு • முடிந்து விட்டது. இப்பின்

னணியில் சென்னை – திருச்சி இ தீபாவளியையொட்டிகடும் வாகன நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகி றது. டையே

இதனால் வாகனங்கள் பல மணி நேரம் முடங்கிக் கிடக்க வேண்டிய இக்கட் டானநிலை ஏற்பட்டுவிடும். இதனால் தீபாவளி கொண் டாட்டத்துக்காக ஊருக்கு செல்பவர்களும் உடல் ரீதி யாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்துவிடுவார்கள்.

இப்பின்னணியில் தீபா வளி வாகன நெரிசலை தவிர்க்க சென்னை – திருச்சி இடையே சுங்கக்கட்டணம் வசூல் ரத்து செய்யப்படும். என்று தேசிய நெடுஞ்சாலை முகமையின் பிராந்திய அலுவலர் வீரேந்திர சம்பியால் தெரிவித்துள்ளார். இதை வாகனஉரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.

ஆனால், சுங்கச் சாவடிகளில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே வாகனங்களை காத்திருக்க வைக்க வேண்டும், தீபாவளியை கொண்டாட வாகனங்கள் அதிகரிப்பால் மணிக்கணிக்கல் நேரம் ஆகும் என்பதால் NHAI பின்வாங்கி கட்டண வசூலை ரத்து செய்துள்ளது.

Tags: Tamil Nadu
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.01.2026 - 15:58:38
Privacy-Data & cookie usage: