Tomorrow will be held Dec 16 Amma project villages
jaya-cm பெரம்பலூர் மாவட்டத்தில், நாளை டிச 16 – அம்மா திட்டம் நடைபெறும் கிராமங்கள் விவரம்:

வேப்பந்தட்டை வட்டத்தில் தொண்டப்பாடி வருவாய் கிராமத்திற்குட்பட்ட பாலையூர், குன்னம் வட்டத்தில் அசூர் மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் தொண்டபாடி வருவாய் கிராமத்திற்குட்பட்ட சீராநத்தம் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.

பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை, மேலும் ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக்கள் மீது ஆணைகள் பிறப்பித்தல் ஆகியவை அன்றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக முகாம் நடைபெறும் இடங்களில் இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி, பிரிண்டர் ஆகிய வசதிகள் செய்யப்பட உள்ளன. முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகின, என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!