Tomorrow’s Job Camps at Namakkal District Employment Office: Collector Information

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 11ம் தேதி நடைபெறுகிறது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.

இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளுக்கு அவர்களது பதிவு மூப்பின்படி பரிந்துரைக்கப்படும்.

நாளை நடைபெறும் முகாமில் திருப்பூர் டெக்ஸோ பேஷன் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், கண்காணிப்பாளர், மேலாளர், கம்ப்யூட்டர் பயிற்சியாளர், கணக்காளர், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், இரவு பாவர் மற்றும் ஆசிரியர்கள் பேன்ற டிப்ளமோ, பட்டபடிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு பி.எட். முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!