Torrential rainfall in the perambalur district Details
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சிறு சிறு ஓடைகள் மற்றும், சிற்றாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தரிசு நிலங்களில சாகுபடி செய்யப்பட்டுள்ள மானாவரி பயிர்களுக்கு உரம் வைத்தல், மற்றும் களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு விவரம் (மி.மீ – ல் )
பெரம்பலூர் 82 மிமீ, செட்டிக்குளம் 73 மிமீ, பாடாலூர் 37 மிமீ, வேப்பந்தட்டை 18 மிமீ, தழுதாழை 13 மி மீ என மொத்தம் 223 மிமீ பதிவாகி இருந்தது.
சராசரி மழையளவு 44.60 மிமீ ஆகும்.