வங்கியில் நன்னடத்தை அலுவலர் மற்றும் மத்திய அரசு பணியாளார் தேர்வாணைய தேர்விற்கான பயிற்சி வகுப்புகள்: பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2021-10-13 | 09:00h
update
2021-10-13 | 09:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Training Classes for Banking Probation Officer and Central Government Employee Examination: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

பாரத மாநில வங்கியின் நன்னடத்தை அலுவலர் 2056 காலிபணியிடங்களுக்கான அறிவிக்கை www.sbi.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2021. மேலும், தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (SSC-SELECTION POSTS-2021) பல்வேறு துறைகளில் பல்நோக்கு பணியாளர், பெண்கள் படைப் பயிற்சிவிப்பாளர், மருத்துவ உதவியாளர் போன்ற 3261 பல்வேறு பணிக்காலியிடங்கள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகாலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணைய இணையதளம் வாயிலாக 25.10.2021 வரை விண்ணப்பிக்கலாம். மேற்குறித்த தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 11.10.2021 அன்று துவக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரத்தினை; 9499055913 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 11:14:19
Privacy-Data & cookie usage: