Uneven distribution of drinking water; People with road jams in Perambalur

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில் முறையாக குடிநீர் வழங்க கோரி மக்கள் இன்று இரவு திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் 9 வார்டு அவ்வையார் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் மற்றும் காவிரி குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் தண்ணீர் விநியோம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் திடீரென சாலையில் காலிக்குடங்களை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்த பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) ராதா, பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரத்விராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் விநியோகம் சீர்செய்யப்படும் என உறுதி அளித்ததின்பேரில் அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!