பதிவு செய்யப்படாத மகளிர், குழந்தைகள் விடுதிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை ; நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை

schedule
2019-01-11 | 11:31h
update
2019-01-11 | 11:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Unregistered women, children would carry out a crackdown hostels; Namakkal Collector

Advertisement

நாமக்கல் மாவட்ட ஆட்சியர்ஆசியா மரியம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பு :

நாமக்கல் மாவட்டத்தில் தனியாரால் நடத்தப்படும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கியுள்ள மகளிர் விடுதி மற்றும் முதியோர் இல்லங்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதி மற்றும் தங்கும் இல்லங்கள் சட்டப்படி முறையாக மாவட்ட கலெக்டரிடம் பதிவு செய்து நடத்தப்பட வேண்டும்.

இதுநாள் வரையில் முறையாக பதிவு செய்யப்படாத விடுதி மற்றும் இல்லங்களை, உடனடியாக மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் பதிவு செய்து கொள்ளவேண்டும். பதிவு செய்யப்படாத இல்லங்களை நடத்துவது கண்டறியப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 06:50:59
Privacy-Data & cookie usage: