வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்: பெரம்பலூர் ஜில்லா போலீஸ் அறிவிப்பு!

schedule
2022-06-11 | 07:08h
update
2022-06-11 | 07:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vehicles seized in cases auctioned: Perambalur District Police Notice!

பெரம்பலூர் மாவட்டத்தில் 102 CrPC வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 101 வாகனங்களை, அரசுக்கு ஆதாயம் தேடும் நோக்கத்தில் பெரம்பலூர் கலெக்டர் ஏலம் விட அனுமதி வழங்கியதின் அடிப்படையில் பெரம்பலூர் எஸ்.பி மணி உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியபிரகாசம், தலைமையில் அவரது குழுவினரால் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினரால் 101 வாகனங்களையும் 21/06/2022 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பொது ஏலம் விட்டு ஏலத் தொகையை அரசு ஆதாயம் ஆக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதில், ஏலம் எடுக்க வரும் நபர்கள், ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 2 சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 1000-மும் 3 மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு ரூபாய் 2000-மும் காப்பீட்டுத் தொகையாக செலுத்தி தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும், ஏலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அடையாள எண் கொண்ட வில்லை வழங்கப்படும்.
பதிவு செய்த நபர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். உடனிருப்பவர்களுக்கு அனுமதி கிடையாது.

அதிகபட்ச விலைக்கு வாகனங்களை ஏலத்திற்கு எடுத்தவர்கள் ஏலத்தொகை GST யுடன் சேர்த்து பிற்பகல் 03.00 மணிக்கு உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் தாங்கள் செலுத்திய காப்பீட்டு தொகை கழித்துக் கொள்ளப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் தாங்கள் கட்டிய காப்பீட்டு தொகையை திருப்பிதரப்படமாட்டாது. ஏலம் ரூபாய் 100-ன் மடங்கில் கேட்கப்பட வேண்டும். வாகனத்துடன், வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும் பதிவு செய்து வழங்க இயலாது. ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும்.

பொது ஏலத்தில் காவல்துறையைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ள அனுமதி இல்லை. 11.06.2022-ம் தேதி முதல் 20.06.2022ம் தேதி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வாகனங்களை நேரில் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும்.
ஏலம் எடுக்க வருபவர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் மற்றும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், என பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 16:54:06
Privacy-Data & cookie usage: