மாலை நீண்ட நேரமாகியும் ரியாஸ் மற்றும் அப்ரோஸ்கான் இருவரும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் தேடி சென்றனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள கிணற்றின் மேல் பகுதியில் ரியாஸ், அப்ரோஸ்கான் பயன்படுத்திய உடைகள் கிடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் மங்களமேடு போலீசாருக்கும், பெரம்பலூர் தீயணைப்பு மீட்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றிலிருந்து தண்ணீரை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியற்றி உடல்களை மீட்டனர். இது குறித்து மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.