Woman killed in pool in Ramanathapuram
ராமநாதபுரத்தில் குளத்தில் குளித்து கொண்டிருந்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றபோது ஏற்பட்ட தகராறில் பெண்ணை குளத்தில் தள்ளி கொலை செய்த கொடுரனை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் பழங்கோட்டை அயுப்கான் மனைவி பவுசியா பேகம் (வயது 47). இவர் ராமநாதபுரம் மகர்நோன்பு பொட்டல் பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி பார்த்த போது குளத்தில் பவுசியா பேகம் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. உடலை கைப்பற்றி போலீசார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, பழங்கோட்டை ஜபாருல்லா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர வீசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், பவுசியா பேகம் குளித்து கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த ராமநாதபுரத்தில் ஓட்டலில் பணிபுரியும் கமுதி பெருநாழி திம்மநாதபுரத்தை சேர்ந்த குமார் (வயது 55) என்பதும், அவர் பவுசியா பேகத்தை மானபங்கம் செய்ய முயன்று. அதில் தப்ப நினைத்த பவுசியா பேகத்திற்கும் – குமாருக்கும் நடந்த கடுமையாக போராட்டத்தில்,
ஆத்திரமடைந்த குமார் பவுசியாபேகத்தை குளத்தில் தள்ளி நீரில் மூழ்கடித்து கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் தலைமையிலான போலீசார் கொலை செய்த குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.