Women with empty pots, irregular water supply Plea to denounce the roadblock in Perambalur City!

முறையாக தண்ணீர் வினியோகம் செய்யாத பெரம்பலூர் நகராட்சியை கண்டித்து காமராஜர் வளைவு அருகே பெண்கள் காலிகுடங்களுடன் சாலைமறியல்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் வளைவு மற்றும் கம்பன் நகர் பகுதிகளில் நள்ளிரவில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் வினியோகம் செய்வதை கண்டித்து அப்பகுதி பெண்கள் இன்று காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் நகர் தற்போது முழுவதும், தண்ணீர் வினியோகத்தில் சீரற்ற நிலை உள்ளது. இந்நிலையில் பலமுறை தகவல் தெரிவித்தும் நகராட்சி அலுவலர்கள் அலட்சியத்தோடு எந்நவித முன்னறிவிப்பும் இன்றி தண்ணீர் வினியோகம் செய்வதை கண்டித்து பெண்கள் காலிகுடங்களுடன் காமராஜர் வளைவு, சங்குப்பேட்டைக்கு இடைப்பட்ட பகுதியில் சாலைமறியிலில் ஈடுபட்டனர். அதனால், ஆத்தூர் – பெரம்பலூர் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் காவல் நிலையத்தினர், நகராட்சி பணியாளர்கள், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும், இரண்டு டிராக்டர் வாகனங்களில் தண்ணீர் வினியோகம் செய்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!