மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.93 ஆயிரத்து 264 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் வழங்கினார்
திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவா; திரு.க.நந்தகுமார; தலைமையில் இன்று (18.07.2016) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 484 மனுக்களை மாவட்ட ஆட்சியரக அலுவலர்களிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் ரூ.3,886 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரம் 24 நபர்களுக்கு ரூ.93,264 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தேவிகாராணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.