young graduates interested in contesting for the post of Ramanathapuram Municipal Councilor on behalf of the BJP!

இராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராமநாதபுரம் நகராட்சி மன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெரும் நிகழ்ச்சி மாவட்ட தலைமை அலுவகத்தில் நகர் மன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் குமார், ஆத்மா கார்த்திக், சிவசங்கரன், பரமேஸ்வரன், சவுந்தரபாண்டியன், மண்டபம் ஒன்றிய தலைவர் முருகேசன், ராமநாதபுரம் நகர் தலைவர் வீரபாகு, மாவட்ட ஊடகவியல் பிரிவு தலைவர் குமரன் ஆகியோர் முன்னிலையில் விருப்ப மனுக்களை பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் 3வது வார்டை சேர்ந்த பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இளம் வேட்பாளர் பொன்னரசி தனது விருப்ப மனுவை தனது குடும்பத்தாருடன் வந்து தாக்கல் செய்தார். அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலாளர் குமார் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ஆனந் உட்பட பலர் பங்கேற்றனர்.

தற்போது பா.ஜ., சார்பில் போட்டியிட பல இளம் பட்டதாரி பெண்களும், சமுதாய சிந்தனை உள்ள பொதுநல வாதிகளும் விண்ணப்பம் பெற்று சென்றுள்ளனர். ஏற்கனவே பல காலமாக சமுதாய சிந்தனையோடு மக்களுக்காக பணியாற்றி இன்றளவும் சைக்களில் பயணம் செய்து மக்கள் சேவையே மகேசன் சேவை என பணியாற்றும் நிரந்தர கவுன்சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு மக்கள் பணி குறித்து எப்படி பணியாற்ற வேண்டும் என எடுத்துரைத்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!