பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மூலம், தேசிய கால்நடை இயக்க திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு தீவன புல் நொறுக்கும் இயந்திரத்தை, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 2014- 2015 ஆம் நிதியாண்டில், தேசிய கால்நடை இயக்க திட்டத்தின் கீழ் தீவன சேதாரத்தை குறைக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் மின் சக்தியால் இயங்கும் தீவன புல் நொறுக்கும் இயந்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, தலா ரூ. 19,150 மதிப்பீட்டில் 50 பயனளிகளுக்கு 75 சத அரசு மானியத்தில் ரூ. 95,7500 மதிப்பிலான தீவன புல் நொறுக்கும் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது புதன்கிழமை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அப்சல், உதவி இயக்குநர் மனோகரன், சிறப்பறிஞர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்