Perambalur: Man arrested for selling 8 kg of banned gutka products!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் வேப்பந்தட்டையில் கண்ணன் (62) என்பவர் தனக்கு சொந்தமான பெட்டி கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது. அவரிடமிருந்து ஹான்ஸ் (3.200 கிலோ கிராம்), கூல்லீப் (340-கிராம்), விமல் பாக்கு (3.225-கிலோ கிராம்) மற்றும் V1-பான் மசாலா (1.260-கிலோ கிராம்) என மொத்தம் 8.025 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு, வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.