Perambalur: VCK pays tribute to the martyrs of the language struggle!

ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழை காக்க உயிர்த்தியாகம் செய்த ஹிந்தி எதிர்ப்பு போராளிகள் நடராசன், தாளமுத்து மற்றும் கீழப்பழூவூர் சின்னசாமி உள்ளிட்ட தியாகி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். விசி கட்சியை சேர்ந்த மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், அணிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!
Enable Notifications OK No thanks