3 people asked what the problem was at its plea to the dispute at the scythe to cut!
பெரம்பலூர் அருகே உள்ள திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிவேல், இளங்கோவன் இவர்கள் இருவருக்கும் ரேசன் கடையில் பொருட்கள் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு அந்த ஊருக்கு அருகே உள்ள சறுக்குப் பாலத்தில் இரவு நேரத்தில் ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டு உள்ளனர். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ராமலிங்கம் (வயது 20), ராஜகோபால் (வயது 18), முரளி (வயது 22) ஆகியோர் என்ன பிரச்சனை எதுக்காக தாக்கி கொள்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது மணிவேல் என்பவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையில் ராமலிங்கத்தின் தலையில் வெட்டி உள்ளார். இதே போன்று ராஜகோபால், முரளியை தாக்கி உள்ளார். அதனால், காயமடைந்த முரளி, ராஜகோபால், ராமலிங்கம் மூவரும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பெரம்பலூர் போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.