பெரம்பலூரில் நேற்று மாலை பெய்த மழையளவு விவரம். (மி.மீ-ல்)
பெரம்பலூர் 52, செட்டிக்குளம் 25, வேப்பந்தட்டை 37, தழுதாழை 9, பாடாலூர் 41 என மழை பதிவாகியது. மொத்தம் 164 மி.மீ மழை பதிவாகியது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 32.8 மி.மீ.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடியுடன் கூடிய கனமழை பலத்த காற்றுடன் பெய்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மரம் செடி கொடிகள், வறட்சியால் காய்ந்து கருகி வரும் வேளையில் நேற்று பெய்த மழை பெரும் பயன் உள்ளதாக இருக்கும் என உழவர்கள் தெரிவிக்கின்றனர்.