Widespread rain in Perambalur district today!
பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த வேளையில் இன்று மாலை 3 மணிக்கு பின்னர் எசனை, வைப்பந்தட்டை, அரசலூர், அன்னமங்கலம், வடக்கு மாதவி, பெரம்பலூர், எளம்பலூர், உள்ளிட்ட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான காற்றுடன் கனமழை சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் நெல், எள் அறுவடை செய்து வரும் உழவர்கள் அவதிப்பட்டனர். குளிர்ச்சியான காற்று தொடர்ந்து வீசி வருவதால் வீட்டின் சுவர்கள் வெப்பத்தை உமிழ்ந்து குளிர்ச்சியானது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.