Notice to stop power supply to Perambalur city and surrounding areas!
பெரம்பலூர் நகரில் வரும் ஜன.30- செவ்வாய்க் கிழமை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூர் பழைய – புதிய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வடக்குமாதவி சாலை, வடக்குமாதவி, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை, கடைவீதி, பாலக்கரை, நான்கு சாலை பகுதி, மின்நகர், துறைமங்கலம், கே.கே. நகர், அபிராமபுரம், எளம்பலூர், இந்திரா நகர், சிட்கோ, காவலர் குடியிருப்பு, மற்றும் சமத்துவபுரம், அருமடல் அருமடல் ரோடு ஆகிய பகுதிகளில், அன்று காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது, என அதில் தெரிவித்துள்ளார்.