பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 19 நபர்களுக்கு தலா ரூ. 3,600 மதிப்பிலான தையல் இயந்திரங்களை வழங்கினார்.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழங்க கோரிய பொதுமக்களிடமிருந்து 335 மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சி. பிரகாசம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, தனித்துணை ஆட்சியர் முருகேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.