aynapuram

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் அயினாபுரத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்தரேஸ்அஹமது தலைமையில் இன்று (05.8.2015) மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆலத்தூர்வட்டம் அயினாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சார்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் சுகாதாரம், நியாயவிலைக்கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கல்வி, போக்குவரத்து வசதி,

108 அவசர ஊர்தி சேவை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும்,

தாட்கோ திட்டம், புதுவாழ்வுத்திட்டத்தின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு சங்க நடவடிக்கைகள் குறித்தும் தனித்தனியாக கேட்டறிந்தார்.

உங்கள் ஊருக்கு குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா, கிராம செவிலியர்கள் தவறாது தங்கள் பகுதிக்கு வந்து சுகாதாரம் குறித்த அறிவுரைகள் வழங்குகிறார்களா, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் சத்துணவு வழங்கப்படுகிறதா என்றும் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை நேரடியாக அழைத்து அதற்குரிய விபரங்களை கேட்டறிந்து பொது மக்களிடம் எடுத்துக் கூறினார்.

மேலும் மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கும்போது அதற்கான ஒப்புகைச்சான்றினையும் கட்டாயம் பெற வேண்டும். இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் கிராம நிர்வாக அலுவலகத்தில் தீர்வு தெரிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்த முகாமில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகையாக ரூ8 ஆயிரத்திற்க்கான காசேலைகளையும், 9 நபர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.1லட்சத்து 12 ஆயிரத்து 500 க்கான காசேலைகளையும்,

இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகையாக 4 நபர்களுக்கு தலா ரூ.1லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசேலைகளையும், 8 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 22 நபர்களுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும்,

வேளாண்துறையின் மூலம் 3 நபர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 725 க்கான நலத்திட்ட உதவிகளும், புது வாழ்வுத்திட்டத்தின் கீழ் 13 நபர்களுக்கு தனிநபர் இல்ல கழிவறைகள் அமைப்பதற்காக ரூ.95 ஆயிரத்திற்கான காசோலைகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் ஒரு நபருக்கு ரூ.2,600 மதிப்பிலான சலவை பெட்டியையும்,
5 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டையும் என மொத்தம் 66 பயனாளிகளுக்கு ரூ.8லடசத்து 74 ஆயிரத்து 825 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ்அஹமது வழங்கினார;.

ஊராட்சி மன்றத்தலைவர் மல்லிகா உட்பட வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!