11-7-photo ex.jpg-1

பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக நடைபெறும் தமிழக அரசின் “நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி – என்றும் அம்மாவின் ஆட்சி” என்ற தலைப்பிலான சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி – மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) மீனாட்சி துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான சங்குப்பேட்டை சமுதாயக்கூடத்தில் இன்று ஜுலை 11 முதல் ஜுலை 13 வரை நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியினை இன்று (11.07.2015) மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) மீனாட்சி துவக்கி வைத்த அவர் தெரிவித்தாவது: .

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அரசின் திட்டங்களை செயல்படுத்தும் நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக்கண்காட்சிகள்; அரசு நிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும், பயனடைந்தவர்கள் குறித்தும் அந்தந்த பகுதி மக்கள் அறிந்து கொள்ளவும், பொதுமக்களிடையே அத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு உண்டாக்கவும் எளிதாக இருக்கிறது.

சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்புத்திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம், விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம்,

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, விலையில்லா சைக்கிள்;வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம், உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் பெரியஅளவில் மக்களை கவரும் வகையில் கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்டு, தமிழக முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து பயன்பெற வேண்டும்.. என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) மலர்விழி, வேளாண்மைத்துறை இணைஇயக்குநர் (பொ) அய்யாசாமி, மாவட்ட சமூகநல அலுவலர் பேச்சியம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பாவேந்தன், பாரதி பெரம்பலூர் வட்டாட்சியர் செல்வராஜ், மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினர் மகளிர் சுய உதவிக்குழுவினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!