Private sector job camp in Namakkal; Officer orders for 51 Candidate

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாமில் 51 பேருக்கு பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டது.

தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்தமுகாமில் திருப்பூர் டெக்ஸோ பேஷன் மற்றும் 16 பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், கண்காணிப்பாளர், மேலாளர், கம்ப்யூட்டர் பயிற்சியாளர், கணக்காளர், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், இரவு காவலர் மற்றும் ஆசிரியர்கள் போன்ற டிப்ளமோ, பட்டபடிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு பி.எட். முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேர்வு செய்தனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 102 பணிநாடுநர் பங்கேற்றனர். இதில் 51 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. மேலும் இம்முகாமில் முதல் கட்மாக 26 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முகாமிற்கான ஏற்பாடுகளை இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் ராதிகா, செல்வக்குமார், ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!