பெரம்பலூர் : மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள காடூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் நிறைவு நாள் விழா நாளை 8ந்தேதி நடைபெற உள்ளது.

காடூர் படைகாத்தவர் கோவில் அருகே காலை 11 மணியளவில் நடைபெற உள்ள சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்(பொ) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி தலைமை வகித்து காடூர் ஊராட்சிக்குட்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். விழாவில் சார் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி முன்னிலை வகிக்கிறார்.

இதில் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொது மக்களின் அரசின் நலத்திட்டங்கள் குறித்த பொது மக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து பேச உள்ளனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை குன்னம் வட்டாச்சியர் மணிவேலன் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட
வட்டாச்சியர் பாரதிவளவன் செய்து வருகின்றனர்.

எனவே நாளை நடைபெற உள்ள சிறப்பு மனுநிதி மனுநீதி நாள் நிறைவு விழாவில் காடூர் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைள் குறித்த மனுவினை அளித்து பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!