பெரம்பலூர் : புதுநடுவலூர் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 42 பயனாளிகளுக்கு ரூ.31 இலட்சத்து 41 ஆயிரத்து 429 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்.

பெரம்பலூர் வட்டம் புதுநடுவலூர் ஊராட்சியில் சரஸ்வதி மான்ய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது, தலைமையில் இன்று மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், புதுநடுவலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சார்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், பெண்கள், ஊர், பெரியவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் சுகாதாரம், நியாயவிலைக்கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கல்வி, போக்குவரத்து வசதி, 108 அவசர ஊர்தி சேவை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், தாட்கோ திட்டம், புதுவாழ்வுத்திட்டத்தின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு சங்க நடவடிக்கைகள் குறித்தும் தனித்தனியாக கேட்டறிந்தார்.

உங்கள் ஊருக்கு குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா, கிராம செவிலியர்கள் தவறாது தங்கள் பகுதிக்கு வந்து சுகாதாரம் குறித்த அறிவுரைகள் வழங்குகிறார்களா, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் சத்துணவு வழங்கப்படுகிறதா என்றும், நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, பொருட்களின் எடை அளவு சரியாக உள்ளதா உன்றும் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார். பின்னர், சம்மந்தப்பட்ட அலுவலர்களை நேரடியாக அழைத்து அதற்குரிய விபரங்களை கேட்டறிந்து பொது மக்களிடம் எடுத்துக் கூறினார்.

மேலும், மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கும்போது அதற்கான ஒப்புகைச்சான்றினையும் கட்டாயம் பெற வேண்டும். இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் கிராம நிர்வாக அலுவலகத்தில் தீர்வு தெரிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த முகாமில் 32 பயனாளிகளுக்கு ரூ.6,லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நத்தம் வீட்டுமனை பட்டாக்களையும், 8 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 3 நபர்களுக்கு குடும்ப அட்டைகளையும், தாட்கோ மூலம் 2 நபர்களுக்கு ரூ.20 லட்சத்து 83 ஆயிரத்து 249 மதிப்பிலான வாகனங்களையும்,

உழவர் பாதுகாப்புதிட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.8,000 மதிப்பிலான திருமண உதவித்தொகையும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் ஒரு நபருக்கு ரூ.1,20,000 மதிப்பலான நலத்திட்டங்களும், முதிர்கன்னிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 2 நபர்களுக்கு 2,40,000 மதிப்பிலான காசோலைகளையும்,

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 13 நபர்களுக்கு ரூ.24 ஆயிரத்து 700 மதிப்பிலான கல்வி உதவித் தொகைகளையும், வேளாண்த் துறையின் மூலம் 4 நபர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 480 மதிப்பிலான உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது வழங்கினார்.

இம்முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் கள்ளபிரான், மாவட்ட ஆதிராவிடர் நல அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் பேச்சியம்மாள், உதவிஇயக்குனர் (ஊராட்சிகள்) அவினாசிலிங்கம், பெரம்பலூர் வட்டாட்சியர் செல்வராஜ், ஊராட்சி மன்றத்தலைவர் சமர்தகனி உட்பட வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைச்சாந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!