பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 73 ஏரிகளில் 42 ஏரிகள் இன்று முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. அடுத்த கட்டமாக எசனை, நெற்குணம், செங்குணம், கீழக்கரை மதவானையம்மன் ஏரி, ஏரிகள் நிரம்ப தயாராகி வருகின்றன.

சிறுவாச்சூர், பில்லங்குளம், அத்தியூர், ஆண்டிக்குரும்பலூர், வரகுபாடி ஏரி, காரை சின்ன ஏரி, தெரணி ஏரி, நாரணமங்கலம், அயிலூர் ஏரிகள் பாதிக்கு மேற்பட்ட நீரை கொள்ளவை பெற்றுள்ளன.

தேனூர், கீழப்புலியூர், வெங்கனூர், செட்டிக்குளம், கண்ணப்பாடி, களரம்பட்டி, புதுநடுவலூர், பேரையூர் , காரை பெரிய ஏரி, பொம்மனப்பாடி, லாடபுரம் சின்ன ஏரி, து.களத்தூர் பெரிய ஏரி, காரியனூர், சாத்தனவாடி, கை.களத்தூர், நூத்தப்பூர், துறைமங்கலம் சின்ன ஏரி, து.களத்தூர் சின்ன ஏரி உள்ளிட்ட ஏரிகள் 50 சதவீத கீழ் கொள்ளவு நீரை பெற்றுள்ளன.

இன்று காலை 8 மணி வரை நிலவரப்படி வேப்பந்தட்டை பகுதியில் 3 மி.மீ, தழுதாழை பகுதியில் 2 மி.மீ மழையளவும் பதிவாகி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!