In Perambalur district, the day after tomorrow, ” AMMA Thittam ” The villages
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர அலுவலக செய்திக்குறிப்பு:
வரும். செப் .9 அன்று பெரம்பலூர் வட்டத்தில் கல்பாடி (வடக்கு) வருவாய் கிராமத்திற்குட்பட்ட க.எறையூர், வேப்பந்தட்டை வட்டத்தில் வேப்பந்தட்டை (தெற்கு) வருவாய் கிராமத்திற்குட்பட்ட அரசலூர், குன்னம் வட்டத்தில் வசிஸ்டபுரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட மேட்டுகாளிங்கராயநல்லூர் மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் பாடாலூர் (மேற்கு) ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.