dead பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள சின்னாறு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி மனைவி இருசாயி (60) இவர் இன்று அதிகாலை 5.45 மணியளவில் சின்னாறு பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மங்களமேடு போலீசார் இறந்து கிடந்த மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து, விபத்திற்கு காரணமான அடையாளம் தெரியாத வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!