27-7 gdp.jpg-1

பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது தலைமையில் இன்று (27.07.2015) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 414 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாக அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் அளித்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனுடைய நபர்களை திருமணம் செய்த 9 நபர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.3,50,000 மதிப்புள்ள காசோலைகளுடன் திருமாங்கல்யம் செய்வதற்காக தலா 4 கிராம் தங்கத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

மேலும் கடந்த 24.07.2015 மற்றும் 25.07.2015 ஆகிய தேதிகளில் சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான 3-வது பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் புதுவாழ்வு திட்டம் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இதில் கை.களத்தூர் ஊராட்;சியை சேர்ந்த எஸ்.பிரபு 100 மீட்டர் பிரிவுகளில் 3 தங்க பதக்கமும், தேவையூர் ஊராட்சியை சேர்ந்த டி.அம்பிகாபதி 100 மீட்டர் சீனியர் பிரிவுகளில் 3 வெள்ளி பதக்கமும், சிறுகன்பூர் ஊராட்சியை சேர்ந்த எ.திவ்யா 100 மீட்டா; சீனியர் பிரிவுகளில் 3 தங்க பதக்கமும், மேலபுலியூர் ஊராட்சியை சேர்ந்த எஸ்.கலைச்செல்வன் 200 மற்றும் 100 மீட்டர் பிரிவுகளில் தலா 1 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கமும் பெற்றுள்ளனர். மேலும், எஸ்.பிரபு மற்றும் எ.திவ்யா ஆகியோர் தங்களின் தனிதிறன்களுக்காக சிறப்பு பரிசுகளையும் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பதக்கங்களை வென்று பெருமை சேர்த்த வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, தனித்துணை ஆட்சியர் முருகேஸ்வரி, புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் ரூபவேல், மாவட்ட மாற்றுத்திறானிகள் நல அலுவலர் இராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!