பெரம்பலூர்: தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா சட்டப்பேரவையில் விதி 110 விதியின் கீழ் அறிவித்த 142 கிராம கோவில் பூசாரிகளுக்கு பூஜை பொருட்களை பெரம்பலூர் நடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா, சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன், நகர் மன்றத் துணை தலைவரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து இன்று மதனகோபாலசுவாமி திருக்கோயிலில் வழங்கினார்கள்.
புகைப்படக் கண்காட்சி:
அதனை தொடர்ந்து புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்ட்டிருந்த சிறு புகைப்பட கண்காட்சியினை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், நகர் மன்ற துணைத் தலைவர் ஆகியோர் பார்வையிட்டனர்.
இப்புகைப்பட கண்காட்சியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சிறப்புத்திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு வழங்கும் திட்டம், உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் பெரியஅளவில் கோவிலுக்கு வருகை தந்த மக்களை கவரும் வகையில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவரும், மாவட்ட செயலாளருமான ஆர்.டி.இராமசந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், இந்துசமய அறநிலையதுறையின் உதவி ஆணையர் செந்தில்குமார், செயல் அலுவலர் இராஜேந்திரன், ஆய்வாளர் மலையரசுபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.