55,000 cash, 2 pounds jewelery damaged in Electrical leakage, house fire near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அசூர் கிராமம் அண்ணாநகரில் உள்ள நல்லசாமி – பாக்கியம். இவர்களது வீடு நேற்றிரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த சிலிண்டர் சுமார் 50 அடி உயரம் சென்று வெடித்தது. பின்னர் ஊர் பொதுமக்கள் தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த 55 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 2பவுன் நகை, அவரது குடும்பத்தினர் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பள்ளி புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. வீட்டில் ஏற்பட்ட தீயால் அருகே உள்ள வேலு என்பவரின் ஓட்டு வீடு முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த குன்னம், போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.