A photographic exhibition explaining the achievements of Government of Tamil Nadu

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட சங்குப்பேட்டை சமுதாய கூடத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கண்காட்சியினை சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.இராதமிழ்செல்வன் ஆகியோர்களது முன்னிலையில் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.டி.இராமசந்திரன் திறந்து வைத்தார்.

இக்கண்காட்சியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட ஆட்சித் தலைவர், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.

மேலும், தமிழக அரசின் சிறப்புத்திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் தி;ட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு வழங்கும் திட்டம், உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் பெரியஅளவில் மக்களை கவரும் வகையில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.

இப்புகைப் படக்கண்காட்சியினை பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள் பார்த்துச்சென்றனர்

புகைப்பட கண்காட்சியில் 69 நபர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. இன்றும் நாளையும் இக்கண்காட்சி நடைபெறும். இதில் அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!