Adding new member and renewal to AIADMK in Perambalur Town : RTR started
பெரம்பலூர் அதிமுக நகர கழகம் சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் முகாம் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை யில் இன்று காலை துறைமங்கலம் 3 ரோடு அருகே உள்ள 9வது வார்டில் நடைபெற்றது.
சிதம்பரம் தொகுதி எம்.பி மா.சந்திரகாசி, பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா. தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் நகர செயலாளர் ர.பூபதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் முகாமில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பின்னர் ஓரிரு நாட்களில் பூர்த்தி செய்த பின்பு பெற்றுக்
கொள்ளப்படுகிறது.
நகராட்சி முழுவதும் உள்ள 21 வார்டுகளிலும் வரிசையாக நடக்கிறது. இதில், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.என்.ராஜாராம், மாவட்ட பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பூவை.செழியன், அவைத்தலைவர் நெய்க்குப்பை துரை, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், அண்ணா தொழிற்சங்க தலைவர் வீரபாண்டியன், வழக்கறிஞர் அணி கதிர்.கனகராஜ், அமைப்பு சாரா தொழிலாளர்கள் அணி இணை செயலாளர் துரை.சரவணன், தகவல் தொழில் நுட்ப அணி பெருமாள், நகர கூட்றவு வீட்டு வசதி தலைவர் முகமது இக்பால், ஆலத்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.சி.பெரியசாமி, முன்னாள் கவுன்சிலர் சின்ன.ராஜேந்திரன், மற்றும் மகளிர் அணியினர், நகர துணை செயலாளர் சுப்பிரமணியன் , 9வது வார்டு கிளை செயலாளர் பி.குமார், நகர மாணவரணி அரணாரை ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.