teachers-dayமாவட்ட மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்க கால அவசகாசம் நீட்டிப்பு செய்யபபட்டுள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:

தமிழக முதலமைச்சரால் 110 விதியின் கீழ் பெரம்பலூரில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் மற்றும் வேப்பூரில் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் துவங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்கள்.

அதனை தொடர்ந்து 28.12.15 அன்று தமிழக முதலமைச்சரால் தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் திறந்து வைக்கப்பட்டது.

மேற்க்கண்ட கல்வி நிறுவனங்களில் 2016 -17 ஆண்டு பட்டயப் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் 20.05.2016 முதல் 10.06.2016 வரை பெறப்படும் என அறிவக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக மாவட்ட மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 17.06.2016 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படுகின்றது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகல் காண்பித்து ரூ.250- ரொக்கமாக செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம், மற்ற அனைத்து பொதுப்பிரிவு வகுப்பைச் சார்ந்தவா;கள் ரூ.500- ரொக்கமாக செலுத்தி விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்ளலாம், என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!