AIADMK youth and young women in Perambalur meeting!
பெரம்பலூரில் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஆர்.டி. இராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஆர்.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.
மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் பாசறை உறுப்பினர் அட்டை வழங்கி பேசியதாவது: கடந்த சட்டசபை தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல் டீசல், கேஸ் விலை குறைக்கப்படும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும் உள்பட பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி திமுக வெற்றிப் பெற்று விட்டது. இதனை பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துக்கூறியும், அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும் ஓட்டு சேகரித்து வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகளவில் வெற்றி பெற்ற அனைவரும் பாடுபடவேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராணி, லெட்சுமி, ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வக்குமார், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, குரும்பலூர் பேரூர் செயலாளர் செல்வராஜ், மாவட்ட அணி செயலாளர்கள் வீரபாண்டியன், பெருமாள், மற்றும் குன்னம் குணசீலன், அந்தூர் ராஜேந்திரன், ஆலத்தூர் ஒன்றிய பேரவை செயலாளரும், ஜெமீன்ஆத்தூர் ஊராட்சித் தலைவருமான ஜி.சண்முகம், ஒன்றிப் பேரவை இணைச்செயலாளரும், கீழமாத்தூர் ஊராட்சித் தலைவருமான கே.பி.ராஜேந்திரன், ஒன்றியப் பேரவை இணைச் செயலாளரும், தொண்டப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான டி.செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், சாத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான சி.நாகராஜன், மாவட்ட மாணவரணி துணைத்த லைவரும், நிலவளவங்கி இயக்குனருமான என்.ராஜ்குமார், புஜங்கராயநல்லூர் எஸ்.செந்தில்குமார், எசனை சத்யாபன்னீர்செல்வம், கோனேரிப்பாளையம் கலையரசிரமேஷ், நத்தக்காடு என்.கே. பிரபாகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் இளங்செழியன் வரவேற்றார். முடிவில் பாசறை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.