At the grievance meeting held at the Perambalur Collector’s office, 138 people filed a petition.
பெரம்பலூர் கலெக்டர் அலுவகத்தில், ஒவ்வொரு திங்கட்கிழமையும், பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம், கலெக்டர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். அதே போல், இன்று நடந்த கூட்டத்தில், 138 பேர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்,
அதில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. சம்மந்தப்பட்ட அலுவலர்கள், குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்திய கலெக்டர் வெங்கட பிரியா,
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் தலா ரூ.50,000 வீதம் 20 பெற்றோர்களுக்கு ரூ.10 இலட்சத்திற்கான வைப்பு நிதி காசோலையினையும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களினை பரிசீலணை செய்து 4 நபர்களுக்கு இலவச தையல் இயந்திரத்தனையும், மாற்றுத்திறனாளிகள் லலத்துறையின் மூலம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட ஆண்டிக்குரும்கலூர் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்ற மாற்றுத்திறனாளிக்கு விலையில்லா மூன்று சக்கர வாகனத்தினையும் வழங்கினார். அரசுத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.