backward Students apply to join in hotels

பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகளும், 4 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதிகளும், 9 மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகளும், 6 மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதிகளும்,

ஒரு மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதியும், 3 மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதிகளும்,

ஒரு மிகப் பிற்படுத்தப்பட்டோர் தொழில்நுட்ப கல்லூரி மாணவியர் விடுதியும் என மொத்தம் 31 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர் – மாணவியர்களும் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகள், விடுதிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ – மாணவியர் விடுதிகளில் சேரத் தகுதியுடைவர்கள்.

பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ,சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

விடுதிகளில் சேரும் மாணவ மாணவியர்களுக்கு எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ – மாணவியருக்கு உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

10-ஆம் வகுப்பு வரை பயிலும் மணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்:

பெற்றோர் (அ) பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை 20.6.2017க்குள்ளும், கல்லூரி விடுதிகளைப்பொறுத்தவரை 15.7.2017க்குள்ளும் சம்மந்தப்பட்ட விடுதிகளின் காப்பாளர்களிடமோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்திலோ அளிக்கலாம்.

மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத் தேவையில்லை.

விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமனாதாகும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே மாணவ – மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை மாணவ-மாணவிகள் பெற்று பயனடையலாம், என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!