Call to apply for joining Kolli Hills Government ITI: Namakkal Collector

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பழங்குடியினர் மட்டும் பயிற்சி பெறும் வகையில் கொல்லிமலையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் மின்சார பணியாளர், பொருத்துநர், டீசல் இன்ஜின் மெக்கானிக், தையல் வேலை தொழில்நுட்பம், வெல்டர் போன்ற பிரிவுகளில் சேர்ந்து பயிடிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் இன்டர்நெட் மூலம் வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சியில் சேரும் மாணவ, மாணவியருக்கு மாதம் ரூ. 500 உதவித் தொகை, இலவச லேப்-டாப், சைக்கிள் மற்றும் சீருடையுடன் தையற் கூலி, வரைபடக் கருவிகள், பாடப் புத்தகங்கள், இலவச பஸ்பாஸ் ஆகிய சலுகைகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்குத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது செல் போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!